Home உலகம் நிலை தடுமாறிய ஹெலிகொப்டர் : மயிரிழையில் உயிர் தப்பிய அமித்ஷா

நிலை தடுமாறிய ஹெலிகொப்டர் : மயிரிழையில் உயிர் தப்பிய அமித்ஷா

0

தேர்தல் பரப்புரையை முடித்துக்கொண்டு ஹெலியில் சென்ற இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மயிரிழையில் உயர்தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 பீகாரில் தீவிர பிரசாரம்

இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெறுவதால் கட்சிகளிடையே தீவிர பிரசாரம் களை கட்டியுள்ளது.

அந்த வகையில் பீகாரில் உள்ள பெகுசராய் பகுதியில் இன்று நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.

அங்குமிங்கும் பறக்கத் தொடங்கிய ஹெலிகொப்டர்

இதைத் தொடர்ந்து ஹெலிகொப்டர் மூலம் அவர் புறப்படுவதற்காக அருகில் உள்ள ஹெலிபேடிற்கு வருகை தந்தார். அங்கு தயாராக இருந்த ஹெலிகொப்டரில் அவர் ஏறி அமர்ந்ததும் விமானி அதனை புறப்பாட்டுக்கு தயாராகிக் கொண்டிருந்தார்.

வானில் எழும்ப முயற்சித்த ஹெலிகொப்டர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து அங்குமிங்கும் பறக்கத் தொடங்கியது. சில நொடிகள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறிய ஹெலிகொப்டரை பின்னர் விமானி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.

இதையடுத்து அசம்பாவிதம் எதுவும் இன்றி அமித் ஷா தனது பயணத்தை தொடர்ந்தார்.

அதிஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. 

Source: https://ibctamil.com/article/helicopter-lost-control-amit-shah-survived-1714414290

NO COMMENTS

Exit mobile version