சேருவில, மாவிலாறு பகுதியில் டித்வா சூறாவளியின் பின்னர் இடம்பெற்ற மனிதாபிமான செயல் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.
குடும்பம் ஒன்று வெள்ளத்தில் சிக்கிய நிலையில் ஹெலிகொப்டர் மூலம் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதன்போது தங்கள் வீட்டின் கூரையில் இருந்து வெள்ள நீரில் விழுந்த தங்களின் விலைமதிப்பற்ற பொருட்கள் நிறைந்த ஒரு பையை 5 நாட்களின் பின்னர் அயல் வீட்டு நபர் மீண்டும் கொண்டு வந்து ஒப்படைந்துள்ளார்.
மதிப்புமிக்க ஆவணங்கள்
அந்தப் பகுதியில் வசித்து வந்த சுஜித் என்பவரின் குடும்பமே இந்த இக்கட்டான நிலையை எதிர்கொண்டது.
வெள்ளம் அதிகரித்ததால், அவர் தனது பிள்ளைகள் மற்றும் மனைவியுடன், பணம், தங்க ஆபரணங்கள், பிறப்புச் சான்றிதழ்கள், மதிப்புமிக்க ஆவணங்கள் மற்றும் பல துணிகளுடன் தயாரிக்கப்பட்ட பையுடன் வீட்டின் கூரையில் ஏறுவதில் சிரமப்பட்டார்.
மறுநாள் மதியம் ஹெலிகொப்டர் மூலம் அவர்கள் மீட்கப்பட்டபோது, அவரது கையில் இருந்த பை தண்ணீரில் விழுந்து காணாமல் போனது.
“எங்களை ஹெலிகொப்டர் மூலம் அழைத்துச் செல்லும்போது, பை தண்ணீரில் விழுந்தது.
செய்வதற்கு எதுவும் இல்லை. நாங்கள் இடைத்தங்கல் முகாமிற்கு அழைத்து வரப்பட்டோம். 5 நாட்களின் பின்னர் இந்த தொலைந்த பை என் நண்பர் சமிந்த குமாராவின் தோட்டத்தின் கம்பி வேலியில் சிக்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் அதை என்னிடம் கொண்டு வந்தார்.
அதில் மதிப்புள்ள தங்கப் பொருட்களும், 37,000 ரூபாய் பணமும் இருந்தன. மேலும், அனைத்து முக்கிய ஆவணங்களும் அப்படியே இருந்தன” என சுஜித் தெரிவித்துள்ளார்.
