Home இலங்கை சமூகம் மாவீரர் தின சமூக செயற்பாட்டாளருக்கு இராணுவ புலனாய்வு பிரிவின் அச்சுறுத்தல்

மாவீரர் தின சமூக செயற்பாட்டாளருக்கு இராணுவ புலனாய்வு பிரிவின் அச்சுறுத்தல்

0

முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் நாளையதினம் (09) இடம்பெறவுள்ள மாவீரர்களது பெற்றோர் உரித்துடையோர்களை கௌரவிக்கும் நிகழ்வை சமூக
செயற்பாட்டாளரும், கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினருமான ஞா. ஜூட்சன்
தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “மாவீரர் துயிலும் இல்லங்களில் இருந்து
இராணுவத்தினரை ஜனாதிபதி விரைவில் வெளியேற்றுவார் என அமைச்சர் ஒருவர்
தெரிவித்திருந்தார்.

அச்சுறுத்தல்

ஆனால் இந்நிலையில் மாவீரர் பெற்றோர்களை கௌரவிக்கும்
நிகழ்வை ஒழுங்குபடுத்தி வரும் எங்களை இராணுவ புலனாய்வு அதிகாரிகள்  வருகின்றனர்.

மேலும் நிகழ்விற்கான மண்டபத்தை வழங்கியவரையும்
விசாரணைக்குட்படுத்தி வருகிறார்கள்,” என அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலைமை தொடர்பாக சமூக செயற்பாட்டாளர்கள் கடும் அதிருப்தி
வெளியிட்டுள்ளதுடன், மாவீரர் பெற்றோருக்கு கௌரவம் செலுத்தும் நிகழ்வை எந்தவித
தடையின்றி நடத்த தீர்மானித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version