Home இலங்கை சமூகம் இலங்கையில் அறிமுகமாகும் இ-ஓட்டுநர் உரிமம்

இலங்கையில் அறிமுகமாகும் இ-ஓட்டுநர் உரிமம்

0

2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இ-ஓட்டுனர் உரிமம் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் ரஞ்சித் ரூபசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் அட்டை தட்டுப்பாடு காரணமாக சுமார் 8 இலட்சம் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஓட்டுனர் உரிமங்கள்

அவர்களில் சுமார் 91 ஆயிரம் பேருக்கு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த இரண்டு மாதங்களில் ஏனையவர்களுக்கும் அட்டைகள் வழங்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை கடந்தாண்டு முதல் தற்போது வரை சுமார் 2 லட்சம் ஓட்டுனர் உரிமங்கள் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அடுத்தாண்டு நிலைமை வழமைக்கும் திரும்பும் எனவும் சாதாரணமாக சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான அட்டைகளை வழங்க முடியும் என்றும் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Source: https://tamilwin.com/article/how-to-get-e-driving-license-in-sri-lanka-1724463457

NO COMMENTS

Exit mobile version