Home ஏனையவை வாழ்க்கைமுறை ஒரே வாரத்தில் நீளமான கூந்தலை பெற இந்த ஒரு எண்ணெய் போதும்

ஒரே வாரத்தில் நீளமான கூந்தலை பெற இந்த ஒரு எண்ணெய் போதும்

0

அடர்ந்த நீளமான கூந்தலை தான் அனைத்து பெண்களும் விரும்புபவர்கள்.

இருப்பினும் வாழ்க்கை முறை, உணவு முறை போன்ற பல காரணங்களால் முடி உதிர்தல், வறண்ட முடி பிரச்சனை உண்டாகும்.

அந்தவகையில், முடி உதிர்வை நிறுத்தி நீளமான கூந்தலுக்கு ஆமணக்கு எண்ணெய் ஒன்று போதும்.

பொடுகை எதிர்த்துப் போராடும் திறன்

ஆமணக்கு எண்ணெயில் உள்ள ரிசினோலிக் அமிலம் உச்சந்தலையிலும் தோலிலும் ஆழமாக ஊடுருவி முடி வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது.

இந்த ஆமணக்கு எண்ணெய் பொடுகை எதிர்த்துப் போராடும் திறன் கொண்டது.

ஆமணக்கு எண்ணெயைப் பாதாம் எண்ணெயுடன் கலந்து மாய்ஸ்சரைசராகப் பயன்படுத்தினால் சருமம் பொலிவுடன் இருக்கும்.  

வலுவான மற்றும் மென்மையான முடி

ஆமணக்கு எண்ணெய் ஒரு சிறந்த ஈரப்பதமான எண்ணெய் என்பதால் முடியை பலப்படுத்துகிறது மற்றும் முடி உதிர்வை குறைக்கிறது.

ஆமணக்கு எண்ணெய் உச்சந்தலையில் உள்ள இயற்கை எண்ணெய்களை சீராக்கவும், ரசாயனங்களால் ஏற்படும் சேதத்தை சரிசெய்யவும் உதவுகிறது.

பல்வேறு ஆக்ஸிஜனேற்றங்களைக் கொண்ட ஆமணக்கு எண்ணெய், வலுவான மற்றும் மென்மையான முடியை அடைய உதவுகிறது.

இதன் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உச்சந்தலையில் மற்றும் மயிர்க்கால்களில் கெரட்டின் அளவை அதிகரிப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.

வாரம் இருமுறை மசாஜ்

 ஆமணக்கு எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் கலந்து உச்சந்தலையில் வாரம் இருமுறை மசாஜ் செய்யவும்.

ஆமணக்கு எண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் 2 வைட்டமின் ஈ மாத்திரைகள் கலந்து தடவினால் முடி உதிர்வது தடுக்கப்படும்.

ஆலிவ் எண்ணெய், மிளகுக்கீரை எண்ணெய் மற்றும் ஆமணக்கு எண்ணெய் சேர்த்து முடியில் தடவி 1 மணி நேரம் கழித்து முடியை அலசவும்.

வெங்காயச் சாறு, ஆமணக்கு எண்ணெய் சேர்த்து 2 வைட்டமின் ஈ மாத்திரைகளை கலந்து பருத்தி துணியால் உச்சந்தலையில் தடவி ஒரு மணி நேரம் கழித்து கழுவவும். 

Source: https://ibctamil.com/article/how-to-grow-hair-faster-thicker-naturally-in-tamil-1723202084

NO COMMENTS

Exit mobile version