Home இலங்கை சமூகம் இலங்கையில் வாவிக்குள் குவிந்து கிடக்கும் தோட்டாக்கள்! தோண்ட தோண்ட பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

இலங்கையில் வாவிக்குள் குவிந்து கிடக்கும் தோட்டாக்கள்! தோண்ட தோண்ட பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

0

கெட்டலாவ வாவியில் இன்றையதினமும் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் 1965, ரீ-56 ரக தோட்டாக்களும் ஏனைய ரக 115 தோட்டாக்களும் கண்டறியப்பட்டுள்ளன.

குறித்த வாவியில், நேற்று (13) நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 5,038 தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதன்படி தற்போது வரையில் கெட்டலாவ வாவியில் இருந்து ரீ-56 துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 7,118 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தோட்டாக்கள் கண்டுபிடிப்பு

நபர் ஒருவர் விறகு வெட்டுவதற்காக கெட்டலாவ வாவி பகுதிக்கு சென்ற நிலையில், ஏரியில் பல தோட்டாக்கள் இருப்பதை அவதானித்துள்ளார்.

இதனை அடுத்து அந்த நபரால், பொலிஸ் அவசர எண்ணுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர் கலென்பிந்துனுவெவ பொலிஸார் முன்னெடுத்த சோதனையின் போதே, பெருமளவான தோட்டாக்கள் கண்டறியப்பட்டுள்ளன.

மேலும், மீட்கப்பட்ட அனைத்து தோட்டாக்களையும், பொலிஸார் பொறுப்பேற்றுள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் மாலை திருவிழா

NO COMMENTS

Exit mobile version