Home இலங்கை குற்றம் யாழில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது!

யாழில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது!

0

சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவரை சண்டிலிப்பாய் மேற்கில் வைத்து கைது செய்துள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இ.எஸ் அபயசேகர தெரிவித்துள்ளார்.

சுன்னாகம் பகுதியை சேர்ந்த 27 வயதான இளைஞ்சரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வழக்கு தாக்கல்

யாழ்ப்பாணம் பொலிஸ் அத்தியட்சகரின் புலனாய்வு பிரிவின் தகவலின்படி, மானிப்பாய் பொலிஸ் பிரிவின் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் சண்டிலிப்பாய் மேற்கு பகுதியில் உள்ள வீடொன்று முற்றுகையிடபட்டுள்ளது.

இதன்போது, 200 மீட்டர் கோடா 19.5 லீட்டர் சட்டவிரோத மதுபானம் உட்பட சட்டவிரோத மதுபான உற்பத்தி உபகரணங்கள் மற்றும் காஸ் சிலிண்டர் ஆகிய உபகரணங்களை கைப்பற்றியுள்ளனர்.

இதனையடுத்து சந்தேகநபரை கைது செய்து, குறித்த நபருக்கு எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version