இந்த ஆண்டு கைப்பற்றப்பட்ட சட்டவிரோத ஆயுதங்கள் இரண்டாயிரத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை இன்றைய (23) நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள்
இலங்கையில் பாதாள உலக மற்றும் போதைப்பொருள் நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக
நடத்தப்பட்ட சோதனைகளின் போது இவ்வாறு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், 2025 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 1947 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
போதைப்பொருள் மற்றும் பாதாள உலக வலையமைப்புகளின் முக்கிய பகுதியாக ஆயுதங்கள்
இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இராணுவ முகாம்
அத்தோடு, சில பாதாள உலகக் கும்பல்கள் இன்னும் ஆயுதங்களை வைத்திருப்பதால் நாடு
முழுவதும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னர் ஒரு இராணுவ முகாமில் இருந்து 78, T-56 துப்பாக்கிகள் பாதாள உலகக்
கும்பல்களுக்கு வழங்கப்பட்டதாகவும் மற்றும் அவற்றில் 36 துப்பாக்கிகள் ஏற்கனவே
அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இருப்பினும், அரசாங்கம் நாட்டில் பாதாள உலகத்தையும் போதைப்பொருள்
அச்சுறுத்தலையும் ஒழிக்கும் என்று குறிப்பிட்ட அவர், இதற்காக ஒரு முறையான
திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
