Home இலங்கை அரசியல் சஜித்தின் கோரிக்கையை நிராகரித்த முக்கிய புள்ளி : வலுக்கும் நெருக்கடி

சஜித்தின் கோரிக்கையை நிராகரித்த முக்கிய புள்ளி : வலுக்கும் நெருக்கடி

0

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியை மீண்டும் ஏற்க வேண்டும் என்ற சஜித்தின் (sajith premadasa)கோரிக்கையை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கர்(Imthiaz-Bakeer-Markar) நிராகரித்துள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு அவர் அந்தப் பதவியிலிருந்து விலகியிருந்தார்.

இருப்பினும், கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பின்னர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கரை அந்தப் பதவிக்கு மீண்டும் நியமித்தார்.

அந்தப் பதவியை ஏற்கவில்லை 

ஆனால், அவர் இன்னும் அந்தப் பதவியை ஏற்கவில்லை என்றும், அதை அவர் ஏற்க மாட்டார் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே பல தொகுதி அமைப்பாளர்கள் தமது பதவிகளில் இருந்து விலகி வருகின்றமை கட்சிக்குள் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

         

NO COMMENTS

Exit mobile version