இந்தியாவுக்கும் (India) பாகிஸ்தானுக்கு (Pakistan) இடையில் யுத்தம் நிகழ்ந்தால் இலங்கை யாருடைய பக்கம் ஆதரவாக இருக்கும் என்கின்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியா சிந்து நதி நீரை நிறுத்துவதும், பாகிஸ்தான் தனது வான்பரப்பில் இந்திய விமானங்கள் பறப்பதற்கு தடை விதிப்பதும் என பல நடவடிக்கைகளை இரு நாடுகளும் அறிவித்துள்ள நிலையில் முறுகல் நிலை அதிகரித்துள்ளது.
இந்தநிலையிலே, இலங்கையின் (Sri Lanka) அதிஉயர் மட்ட பாதுகாப்புக்குழு பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்திலே தங்கி இருக்கின்றது.
இந்த விடயத்தில் பாகிஸ்தான் சார்பாக தாம் இருப்பதாக இலங்கை அரசு வெளிப்படுத்த முயல்கின்றது.
குறிப்பாக இலங்கை அரசு இந்த விவகாரத்திலே ஒரு நடுநிலைமையான தன்மையை வகிக்க தான் இருப்பதாக வெளிக்காட்டிக் கொண்டு இருக்கின்றது.
மேற்படி விடயங்கள் தொடர்பில் விரிவான மற்றும் தெளிவான விளக்கங்களை ஆராய்கின்றது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு நிகழ்ச்சி…
