Home இந்தியா இந்தியாவில் நடைபெற்ற நாடாளுமன்ற பேரணி! மோடியை மன்னிப்பு கோர வலியுறுத்து

இந்தியாவில் நடைபெற்ற நாடாளுமன்ற பேரணி! மோடியை மன்னிப்பு கோர வலியுறுத்து

0

கடந்த ஜூலை 20 அன்று இந்தியாவில் நடைபெற்ற நாடாளுமன்ற பேரணியில் கலந்துகொண்டதற்காக 12 வயது சிறுமிகள் மீது அந்நாட்டு காவல்துறை தாக்குதல் நடத்தியதற்கு பிரதமர் மோடி மன்னிப்பு கோரியாக வேண்டும் என சி.ஜே.பி நிறுவனர் அபிஜித் தீப்கே வலியுறுத்தியுள்ளார்.

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் தமக்கு எதிராகவும், தமது மறைந்த தாயார் குறித்தும் அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்திய மாணவர்களை மன்னிப்பதாகப் பிரதமர் மோடி இன்ஸ்டாகிராமில் செல்பி காணொளி ஒன்றை வெளியிட்டார்.

அதில், “எனக்கு எதிராகவும், எனது மறைந்த தாயாருக்கு எதிராகவும் எழுப்பப்பட்ட அவதூறு முழக்கங்கள் என்னை ஆழமாகப் காயப்படுத்தின. இருப்பினும், தவறு செய்யும் இளைஞர்களுக்கும் சிறுவர்களுக்கும் தண்டனையைத் தேடாமல், அவர்கள் தங்கள் தவறுகளிலிருந்து கற்றுக் கொள்ளவும், அவர்களைச் சரியான பாதையில் வழிகாட்டவும் சமூகம் வாய்ப்பளிக்க வேண்டும். நான் அந்த மாணவர்களை மன்னிக்கிறேன்,” என பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார்.

தாக்கப்பட்ட பெண்

இந்நிலையில் தன்னை இழிவாக பேசிய மாணவர்களை மன்னிப்பதாக மோடி நேற்று முன்தினம் இரவு இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட செல்பி காணொளியை விமர்சித்து நேற்று தீப்கே எக்ஸ் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டார்.

அதில் கருத்து தெரிவித்த அவர், “நேற்று மோடி ஜி ஒரு காணொளியில் சிறுவர்களை மன்னிப்பதாக கூறியிருந்தார் . இன்றிரவு அவர் மீண்டும் ஒரு காணொளி வெளியிட்டு, ஜூலை 20 மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடிக்கு மன்னிப்பு கேட்பார் என நம்புகிறேன்.

12 வயது சிறுமிகளின் தலையில் காவல்துறை தாக்கியது. பெண்களின் ஆடைகள் கிழிக்கப்ட்டன.
எனவே மோடி, காவல்துறையால் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட பெண்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து மாணவர்களை மன்னித்துவிடுவதாக அவர் பேசியதற்கு பதில் அளிக்கும் வகையில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், “பெற்றோர் தனது பிள்ளையின் மறைவினால் படும் துக்கத்தை விட பெரிய வலி வேறேதுமில்லை. தங்கள் குடும்பத்தில் இளம் வயதுடைய ஒருவரை பறிகொடுத்த வலி அவர்களை விட்டு என்றும் நீங்காது. அதோடு சிதைந்த கல்வி முறை குறித்த தீவிரமான கேள்வியும் அவர்களை விட்டு நீங்காதிருக்கிறது” என கூறியுள்ளார்.

Source: https://ibctamil.com/article/india-rally-demanding-an-apology-from-modi-1785617572

NO COMMENTS

Exit mobile version