இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா,(Santosh Jha) மக்கள் விடுதலை முன்னணியின்(ஜேவிபி) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவை(tilvin silva) கடந்த வியாழக்கிழமை (13) மாலை சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பில் இந்திய(india)-இலங்கை(sri lanka) உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளும் வகையில் சந்திப்பை மேற்கொண்டதாக இந்திய உயர் ஸ்தானிகர் தெரிவித்தார்.
இருதரப்பு உறவுகள்
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் இந்த சந்திப்பு கவனம் செலுத்தியது.
மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியே தற்போது இலங்கையில் ஆட்சி செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.