Home இலங்கை சமூகம் இந்திய கடற்றொழிலாளர்களை கைது செய்யுங்கள்: யாழ். கடற்றொழிலாளர்கள் ஆவேச கோரிக்கை

இந்திய கடற்றொழிலாளர்களை கைது செய்யுங்கள்: யாழ். கடற்றொழிலாளர்கள் ஆவேச கோரிக்கை

0

எல்லை தாண்டி வரும் இந்திய கடற்றொழிலாளர்களை கைது செய்யுமாறு யாழ்ப்பாணம் கடற்றொழிலாளர் சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியதாஸ் தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணத்தில் இன்றையதினம்(06.06.2025) உள்ள அவர்களது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்
சந்திப்பிலேயே அவர் இவ்வாறு ஆவேசமாக கடற்படையினரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார். 

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த 60 நாட்களும் எந்தவித பிரச்சினைகளும் இன்றி எமது வாழ்வாதாரமான
கடற்றொழிலை நாங்கள் சிறப்பாக செய்து வந்தோம். வருமானமும் திருப்திகரமாக
இருந்தது.

இந்திய கடற்றொழிலாளர்கள் மீண்டும் 16ஆம் திகதி எமது கடற்பரப்புக்குள்
வரப்போகின்றார்கள்.

முக்கிய வேண்டுகோள்

அவர்களது அட்டூழியங்களால் இதுவரை காலமும் எமது யாழ்ப்பாண
கடற்றொழிலாளர்கள் பல்வேறு விதமான போராட்டங்களை முன்னெடுத்தும் எமது அரசாங்கத்தாலோ
அல்லது இந்திய அரசாங்கத்தாலோ எந்தவிதமான தீர்வுகளும் வழங்கப்படவில்லை.

கடற்படையானது தோளோடு தோள் நின்று எமக்கு பக்கபலமாக செயற்பட வேண்டும். இந்திய
இழுவைமடிப் படகுகளை வராமல் தடுக்க வேண்டும். இரண்டு நாட்டு அரசாங்கமும்
இனிமேலாவது கதைத்து எமக்கு ஒரு நல்ல முடிவை கூற வேண்டும்.

அத்துடன் நமது கடற்படைக்கு ஒரு முக்கிய வேண்டுகோளை விடுக்கின்றோம்.

அதாவது
இந்திய கடற்றொழிலாளர்களை கட்டுப்படுத்த முடியாவிட்டால் சுட்டாவது அவர்களை
பிடியுங்கள். இவ்வாறு பிடித்து அவர்களை சிறையில் அடைத்து விட்டு படகுகளை
கைப்பற்றுங்கள். எமது கடற்றொழிலாளர்களையும் குடும்பங்களையும் காப்பாற்றுவதற்கு இதனைத்
தவிர வேறு வழி இல்லை” எனக் கூறியுள்ளார்.
  

NO COMMENTS

Exit mobile version