ஒரு கோடி 20 இலட்சம் மக்களுக்கு சொந்தமான கடல் பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபடுவதன் காரணமாகவே இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்படுகின்றார்கள் என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரம் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் காணி உறுதி வழங்க நிகழ்வின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர், இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், “நாங்கள் கடலுக்குச்சென்று எப்பொழுது கடலுக்கு வருவார்கள். அவர்களை கொண்டு வந்து சிறையில்
அடைப்போம் என்று எதிர்பார்ப்பதில்லை.
இலங்கை கடல் பரப்புக்குள் கடற்றொழிலில் ஈடுபட வருகின்ற இந்திய கடற்றொழிலாளர்களை நாங்கள் கைது செய்து சிறை வைக்கவில்லை.
அவர்கள் இலங்கையினுடைய எல்லைக்குள் வருவதனால் தான் இது இலங்கையினுடைய சட்டத்துக்கு அமைவாக கைது செய்யப்பட்டு இருக்கின்றார்கள்.
இலங்கையின் எல்லை..
தொப்புள் கொடி உறவுகள் என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற வடக்கு கிழக்கிலே வாழுகின்ற கடற்றொழிலாளர்களின் ஜீவனாயத்தினை முற்றும் முழுதாக அளிக்கும் முயற்சிகளில் இவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
இதன் காரணமாகவே இலங்கை கடல் பரப்புக்குள் அத்துமீரி கடற்றொழிலில் ஈடுபடுகின்ற இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்படுகின்றார்கள்.
இந்திய கடற்பரப்புக்குள் அத்துமீறி உள்நுழைந்ததாக இலங்கை கடற்றொழிலாளர்கள் பலர் கைது
செய்யப்பட்டு இன்றுவரையில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில் தடுத்து
வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.
இவர்களுக்கு எந்த விமர்சனமும் இதுவரையில்
கிடைக்கப் பெறவில்லை. இவ்வாறான ஒரு நிலையில் இந்திய கடற்றொழிலாளர்களது போராட்டமானது நியாயமற்றது” என குறிப்பிட்டுள்ளார்.