இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பு பிரதிநிதியாக ஜெய்சங்கர் இந்த விஜயத்தை மேற்கொள்வதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சர் தனது பயணத்தின் போது ஜனாதிபதி மற்றும் பிற உயர்மட்ட அரசாங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்திய அரசாங்கத்தின் ஆதரவு
‘தித்வா’ புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்திய அரசாங்கத்தின் ஆதரவை மேலும் வலுப்படுத்துவதே இந்திய வெளியுறவு அமைச்சரின் பயணத்தின் நோக்கம் என்று தெரிவிக்கப்படுகிறது.
