Home இலங்கை அரசியல் தீவிரவாதத்திற்கு சென்ற மக்களின் வரிப்பணம்! ஜனாதிபதி அநுர வெளிப்படை

தீவிரவாதத்திற்கு சென்ற மக்களின் வரிப்பணம்! ஜனாதிபதி அநுர வெளிப்படை

0

பொது மக்களின் வரிப் பணம் முன்னர் தீவிரவாதத்திற்கு எவ்வாறு செலவிடப்பட்டது என்பது குறித்து புலனாய்வு அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போது தனக்குத் தெரிவிக்கப்பட்டதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு விஹார மகாதேவி பூங்காவில் இன்று (13) நடைபெற்ற ஜே.வி.பி.யின் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வில் ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

அதன்போது, அவர் தற்போதைய அரசாங்கம் ஒரு கணிக்கக்கூடிய பொருளாதாரத்தை உருவாக்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

அரசாங்க வருவாய்

மேலும், அரசாங்கத்தின் வருவாய் தற்போது எதிர்பார்த்த அளவை விட அதிகமாக அதிகரித்துள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த அரசாங்கம் மேலும் உறுதியாக கட்டியெழுப்பப்படும் எனவும் கட்சி பேதங்களின்றி அரசாங்கம் தனது பணியை நிறைவேற்றும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version