Home இலங்கை சமூகம் யாழ். தெல்லிப்பளை சிறுவர் மற்றும் மகளிர் இல்லங்கள் தொடர்பில் வடக்கு ஆளுநரின் அறிவுறுத்தல்கள்

யாழ். தெல்லிப்பளை சிறுவர் மற்றும் மகளிர் இல்லங்கள் தொடர்பில் வடக்கு ஆளுநரின் அறிவுறுத்தல்கள்

0

துறைசார் திணைக்கள ஆணையாளருக்கு வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸினால் (P. S. M. Charlesஅறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் இயங்கும் சிறுவர் மற்றும் மகளிர் இல்லங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையிலும், பிரதேச செயலாளரின் விசாரணைக் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கைக்கு அமைவாகவும் இந்த அறிவுறுத்தல்களை வடக்கு ஆளுநர் வழங்கியுள்ளார்.

அதன் தொடர்ச்சியாக ஆளுநரினால் நியமிக்கப்பட்ட விசேட விசாரணைக் குழு மீண்டும் களவிஜயம் மேற்கொண்டு ஆளுநருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தொடர் நடவடிக்கைகள்

இந்த அறிக்கையின் பிரகாரம் சம்பந்தப்பட்ட இல்லம் ஒன்றில் கண்டறியப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்ய எடுக்கப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் பற்றிய அறிவுறுத்தல்கள் உரிய திணைக்களங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை, வட மாகாணத்துக்குள் இயங்கும் அனைத்து சிறுவர் இல்லங்களும் உரிய ஒழுங்கு விதிகள் மற்றும் சட்டவரையறைகளைப் பின்பற்றி இயங்குவதை உறுதிப்படுத்தும் விதமான அறிவுறுத்தல்களை தொடர்புடைய அமைச்சுக்கு ஆளுநர் வழங்கியுள்ளார். 

Source: https://ibctamil.com/article/instructions-issued-by-northern-governor-charles-1720615455

NO COMMENTS

Exit mobile version