Home இலங்கை சமூகம் தேர்தலில் ஆர்வமிழந்த மக்கள்: கண்காணிப்பு அமைப்பு வெளியிட்ட தகவல்

தேர்தலில் ஆர்வமிழந்த மக்கள்: கண்காணிப்பு அமைப்பு வெளியிட்ட தகவல்

0

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் மீதான பொதுமக்களின் ஆர்வமும் குறைவாக இருப்பதாக தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள PAFFREL அமைப்பு தெரிவித்துள்ளது.

அத்துடன், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தொடங்கியதிலிருந்து எந்தவொரு பாரதூரமான சம்பவங்களும் பதிவாகவில்லை என்றும் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும், அரசு சொத்துக்களை தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் தனிப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

கண்காணிப்பாளர்கள் 

இதேவேளை, அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்ததாக 20 முறைப்பாடுகளும், தனிப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக 15 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக PAFFREL அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்காக சுமார் 4,000 கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தபால் வாக்குகளை கண்காணிக்க 200 கண்காணிப்பாளர்களும் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அமைப்பின் நிர்வாகப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி கூறியுள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version