Home இலங்கை சமூகம் போதைப் பொருட்களுடன் கைதான அரச உத்தியோகத்தரிடம் விசாரணை முன்னெடுப்பு

போதைப் பொருட்களுடன் கைதான அரச உத்தியோகத்தரிடம் விசாரணை முன்னெடுப்பு

0

அம்பாறையில் (Ampara) நான்கரை இலட்சம் ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்றைய தினம் (03) சாய்ந்தமருது (Sainthamaruthu) பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 25 கிராம் ஐஸ் போதைப்பொருளும் விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலுதிக விசாணை

இதேவேளை, குறித்த சந்தேக நபர் சம்மாந்துறை பகுதியில் உள்ள கல்வித் திணைக்களத்தில் பணிபுரிவதுடன், நீண்ட காலமாக சாய்ந்தமருது உட்பட கல்முனைக்கு (Kalmunai) சூட்சுமமாக ஐஸ் போதைப்பொருளை விநியோகித்து வந்துள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் சந்தேக நபர் மற்றும் சான்றுப்பொருட்களை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக சாய்ந்தமருது காவல் நிலையத்தில் கல்முனை விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்துள்ளனர். 

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/investigation-of-the-arrested-government-officier-1725429467

NO COMMENTS

Exit mobile version