Home இலங்கை சமூகம் மின்சார வாகன இறக்குமதி உரிமங்களில் முறைகேடு : வெளியான தகவல்

மின்சார வாகன இறக்குமதி உரிமங்களில் முறைகேடு : வெளியான தகவல்

0

மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 1000 உரிமங்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக விசேட தணிக்கையில் தெரியவந்துள்ளது.

இந்த அனுமதிப்பத்திரங்களைப் பெறுவதற்கு உண்மையில் தகுதியுடைய பல வெளிநாட்டு பணியாளர்கள் அவற்றைப் பெறவில்லை என்று கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி. விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலைத்திட்டத்தின் விசேட கணக்காய்வு அறிக்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

போலியான முறை

அத்தோடு, இந்த அறிக்கை உரிய நேரத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை சுங்கத்தால் அனுமதி பெறப்படாத சுமார் 400 சொகுசு கார்கள் போலியான முறையில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அண்மையில் குற்றம் சாட்டப்பட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version