Home இலங்கை சமூகம் யாழில் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு

யாழில் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு

0

யாழில் (Jaffna) தவறான முடிவெடுத்து நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

வங்கி வீதி,
ஆவரங்கால் மேற்கு பகுதியைச் சேர்ந்த பரமு ஜெபந்தன் (வயது 40) என்ற இரண்டு
பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (19) இடம்பெற்றுள்ளது.

தவறான முடிவு

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த குடும்பஸ்தர் கடந்த சில நாட்களாக மனைவியை பிரிந்து உறவினர் வீட்டில்
வசித்து வந்துள்ளார்.

இந்தநிலையில், கடந்த 18 ஆம் திகதி வயலுக்கு பயன்படுத்தம் மருந்து
போத்தல் ஒன்றை வாங்கி சென்று, தான் நஞ்சருந்தி உயிரை மாய்க்கப்போவதாக மகளிடம்
கூறிவிட்டு சென்றுள்ளார்.

இதன்பின், பின்னர் நேற்று (19) காலை அவர் படுக்கையில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், சடலம்
மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம்
மேற்கொண்டுள்ளார்.

 நஞ்சு அருந்தியதாலேயே மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று
பரிசோதனைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


NO COMMENTS

Exit mobile version