Home இலங்கை சமூகம் போராட்டத்தில் குதித்த யாழ்.போதனா வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள்

போராட்டத்தில் குதித்த யாழ்.போதனா வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள்

0

பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து யாழ்.போதனா வைத்தியசாலை பாதுகாப்பு
உத்தியோகஸ்தர்கள் இன்றைய தினம் (1) பணிப்புறக்கணிப்பில்
ஈடுபட்டுள்ளனர்.

தமக்கு, சம்பள உயர்வு கோரியும் , தற்போது
பிறிதொரு நிறுவனம் ஒன்று, எம்மை பொறுப்பெடுக்க வேண்டிய நிலையில் , அந்நிறுவனம்
எம்மை உரிய முறையில் பொறுப்பெடுக்கவில்லை, உடனடியாக அந்நிறுவனம் எம்மை
பொறுப்பெடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன் வைத்தே போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளனர்.

நெருக்கடி நிலைமை 

பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் போராட்டம் காரணமாக ,
வைத்தியசாலையின் பாதுகாப்பு மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பு
என்பன கேள்வுக்குள்ளாகியுள்ளது.

அத்துடன் , நோயாளர்களை பார்வையிட வருவோர் கட்டுப்பாடுகள் இன்றி வைத்தியசாலை
விடுதிகளுக்கு செல்வதனால் , நோயாளிகளும் அசௌகரியங்களுக்கு உள்ளாகுவதுடன்,
சிகிச்சை வழங்குவதிலும் நெருக்கடி நிலைமை காணப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version