இரத்தினபுரி – கலவான, தெல்கொட பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
காரணம்
தனிப்பட்ட தகராறு காரணமாக ஒருவர் கலவான, கொஸ்வத்த பகுதியைச் சேர்ந்த இருவர் மீது இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
துப்பாக்கிதாரி இது வரை கைது செய்யப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.
