Home இலங்கை சமூகம் களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற பதில் பதிவாளர் கைது!

களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற பதில் பதிவாளர் கைது!

0

களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற பதில் பதிவாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை நேற்று (20) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த கைது நடவடிக்கை களுவாஞ்சிகுடி காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

தங்க நகைகள் 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு
சான்றுப்பொருள் வைக்கும் அறையில் இருந்து ஒரு கோடி முப்பது இலட்சம் பெறுமதியான
350 கிறாம் தங்க நகைகள் காணாமல் போயுள்ள சம்பவம் தொடர்பிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

களுவாஞ்சிக்குடி காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

7சந்தேக நபரிடம் விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளதோடு நீதிமன்றத்தில்
அவரை முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version