Home இலங்கை சமூகம் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை

கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை

0

ஈழத் தமிழர்களுக்கு எதிரான படுகொலைகளுக்கு நீதி கோரி ஐ.நா.வுக்கு அனுப்பி
வைக்கப்படவுள்ள கடிதத்துக்கான கையெழுத்துச் சேகரிக்கும் நடவடிக்கை
இன்று (24.08.2025) நடைபெற்றுள்ளது.

நீதி கோரி.. 

ஈழத் தமிழருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை மற்றும் செம்மணி மனித
புதைகுழி ஆகியவற்றுக்கு நீதி கோரி
தாயகச் செயலணி என்ற அமைப்பின் ஊடாக நேற்று யாழ்ப்பாணம் செம்மணியில்
கையெழுத்து போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 

குறித்த போராட்டம் இன்று கிளிநொச்சி பொதுச்சந்தை மற்றும்
பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 27ஆம் திகதி வரை குறித்த கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை
முன்னெடுக்கப்பட உள்ளது. 

NO COMMENTS

Exit mobile version