Home இலங்கை குற்றம் கொழும்பு சசிகுமார் படுகொலையில் பிரகாசை பொலிசார் தீர்த்துக் கட்டிய இரகசியம்

கொழும்பு சசிகுமார் படுகொலையில் பிரகாசை பொலிசார் தீர்த்துக் கட்டிய இரகசியம்

0

அண்மைக் காலங்களாக இலங்கையில் பல துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. 

இவை தொடர்பில் பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்திருக்கும் நிலையில், இந்த பயங்கர சம்பவங்களின் பின்னணி குறித்து கவனம் செலுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.  

குறிப்பாக, நேற்று முன்தினம் கொழும்பு – கொட்டாஞ்சேனையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சசிகுமார் என்ற தமிழர் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.

அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்ற இருவர் ஒன்றரை மணித்தியாலங்களுக்குள்ளாகவே கைது செய்யப்பட்டதுடன் அடுத்த 6 மணித்தியாலங்களுக்குள் அவர்களும் பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். 

பொலிஸாரிடம் இருந்த துப்பாக்கியைப் பறித்து தப்பிக்க முயற்சித்தார்கள் என தெரிவித்து சந்தேகநபர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

எவ்வாறாயினும்,  பொலிஸாரால் நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூடும், கொட்டாஞ்சேனையில்  நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலியான சசிகுமாரின் மரணமும் ஏதோ ஒரு இரகசியத்தை மறைக்கின்றதோ என்ற தோற்றப்பாடு பொதுவெளியில் எழுந்துள்ளது.

இது தொடர்பில் விரிவாக ஆராய்கிறது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி, 

Source: https://tamilwin.com/article/kotahena-gun-fire-update-1740302009

NO COMMENTS

Exit mobile version