Home இலங்கை சமூகம் கொத்தலாவல பல்கலைக்கழக மூன்றாம் ஆண்டு மாணவி உயிரிழப்பு

கொத்தலாவல பல்கலைக்கழக மூன்றாம் ஆண்டு மாணவி உயிரிழப்பு

0

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சுகாதார அறிவியல் பீடத்தில் தாதியர் மற்றும் குடும்ப சுகாதார பட்டப்படிப்பை பயின்று வரும் மூன்றாம் ஆண்டு மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தனது வீட்டின் குளியலறையில் வழுக்கி விழுந்து தலையில் பலத்த காயங்களுடன் கண்டி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

கண்டி,ஹன்டெஸ்ஸா பகுதியைச் சேர்ந்த மாணவி எச்.எம்.எல்.டி. ஜெயதிலகாஎன்ற மூன்றாம் ஆண்டு மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பொலிஸார் விசாரணை 

பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் இருந்து வீடு திரும்பியதாகவும், 6 ஆம் திகதி அதிகாலை 2.00 மணி வரை படித்துக் கொண்டிருந்தபோது, ​​குளியலறையில் வழுக்கி விழுந்ததாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கண்டி தேசிய மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை தீவிர பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மாணவி நேற்று (08) உயிரிழந்துள்ளார்.

டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கும் பரீட்சைகளுக்கு தயாராகி கொண்டிருந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் கலஹா பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version