கொழும்பு – மாதம்பிட்டியவில் உள்ள மிஹிஜய செவன வீட்டுத்திட்டத்தில் இருந்து ஒரு
கிலோகிராமிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சோதனை முன்னெடுப்பு
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி சோதனை மேற்கொள்ளப்பட்ட போதே 1 கிலோ 310
மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
சந்தேகநபர் கொழும்பு 15 இல் வசிக்கும் 28 வயதுடையவர் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில் போதைப்பொருளின் சந்தைப்பெறுமதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
