Home இலங்கை சமூகம் நல்லதண்ணி லக்சபான தேயிலை மலையில் சிறுத்தை சடலம் மீட்பு

நல்லதண்ணி லக்சபான தேயிலை மலையில் சிறுத்தை சடலம் மீட்பு

0

நுவரெலியா நல்லதண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்சபான தோட்டம் தேயிலை மலையில் சிறுத்தையொன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

குறித்த தோட்ட மக்கள் வழங்கிய தகவலையடுத்தே சிறுத்தையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்டுள்ள சிறுத்தையின் உடலில் காயங்களும்
காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பொலிஸார் விசாரணை

இந்நிலையில், சிறுத்தை உயிரிழந்த காரணம் தொடர்பாக நல்லதண்ணி பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த சிறுத்தையின் சடலத்தை நல்லதண்ணி வனஜீவராசிகள் எடுத்து சென்றுள்ளதாக
பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version