முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விரைவில் கொழும்புக்கு திரும்புவார் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தயாரில்லை..
தேவையான வசதிகள் அனைத்தும் கிடைத்தவுடன் மகிந்த ராஜபக்ச மீண்டும் கொழும்புக்கு திரும்பவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் ஓய்வு வாழ்க்கைக்கான அனைத்து வசதிகளையும் வழங்குவது அரசின் கடமைகளின் ஒரு பகுதியாகும் என்றும் சஞ்சீவ எதிரிமான்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், மகிந்த ராஜபக்சவுக்கு சரியான மதிப்பை வழங்க இந்த அரசாங்கம் தயாராக இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
