Home இலங்கை குற்றம் மகிந்தானந்த அளுத்கமகே நீதிமன்றத்திடம் முன்வைத்துள்ள கோரிக்கை

மகிந்தானந்த அளுத்கமகே நீதிமன்றத்திடம் முன்வைத்துள்ள கோரிக்கை

0

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்படுவதை தவிர்க்கும் வகையில் முன்பிணையில் செல்ல அனுமதிக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே,
இன்று (14) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் போது தரமற்ற கரிம உரக் கப்பலை நாட்டிற்கு இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பான விடயத்தில் கைது செய்யப்படுவதற்கு முன்னரே அவர் இவ்வாறுமனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

அழைப்பாணை

அதன்படி, இந்த கோரிக்கை தொடர்பாக எதிர்வரும் 19 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைக்குமாறு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டுள்ளார்.

Source: https://tamilwin.com/article/mahindananda-seeks-court-1747214230

NO COMMENTS

Exit mobile version