Home இந்தியா தமிழ் சினிமாவில் கால் பதிக்கும் ஈழத்து வேடன்

தமிழ் சினிமாவில் கால் பதிக்கும் ஈழத்து வேடன்

0

தென்னிந்திய திரைப்பட இயக்குனர் விஜய் மில்டன் இயக்கும் புதிய திரைப்படத்தில் பாடகர் வேடன் (Vedan) இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி அவர் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

யாழ்ப்பாணத்தைச் (Jaffna) சேர்ந்த இலங்கைத் தமிழரான தாய்க்கும் கேரளாவைச் சேர்ந்த முரளி என்பவருக்கும் திருச்சூரில் பிறந்தவர் தான் ஹிரந்தாஸ் முரளி (வேடன்), இவர் மிகச்சிறந்த சொல்லிசைப் பாடகராக தன்னை நிலைநிறுத்தி வருகின்றார்.

சாதி மற்றும் நிற ஒடுக்குமுறை

மலையாள ராப் பாடகரான இவரது பாடல்கள் அண்மைக்காலமாக சமூக வலைதளங்களில் பாரியளவில் பகிரப்படு வைரலாகி வருகின்றது. இவரது பாடல்களில் சாதி மற்றும் நிற ஒடுக்குமுறைக்கு எதிரானதாக உள்ளன. 

இந்நிலையில் இயக்குநர் விஜய் மில்டன் இயக்கும் புதிய திரைப்படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்

குறித்த திரைப்படத்தில் பரத், சுனில், ஆரி அர்ஜுனன், பால் டப்பா, அம்மு அபிராமி, கிஷோர் டிஎஸ், விஜேதா, பிரசன்னா பாலச்சந்திரன் மற்றும் இமான் அண்ணாச்சி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தின் பெயர் விரைவில் வெளியாகவுள்ளது.

NO COMMENTS

Exit mobile version