Home உலகம் இஸ்ரேலியர்களுக்கு அதிரடி தடை விதித்த நாடு

இஸ்ரேலியர்களுக்கு அதிரடி தடை விதித்த நாடு

0

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் மாலைத்தீவு (Maldives) இஸ்ரேலியர்களுக்கு தடை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நாடாளுமன்றத்தில் இன்று (15) இந்தச் சட்டம் அங்கீகரிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே ஜனாதிபதி முகமது முய்சு (Mohamed Muizzu) இந்தச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் அட்டூழியங்கள் மற்றும் இனப்படுகொலைகளுக்கு பதிலளிக்கும் விதமாக மாலத்தீவு அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாட்டை இந்த ஒப்புதல் பிரதிபலிக்கிறது என்றே ஜனாதிபதியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தடை உத்தரவு 

இந்தத் தடை உத்தரவு உடனடியாக நடைமுறையில் வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

1,192 பவளத் தீவுகளைக் கொண்ட ஒரு சிறிய இஸ்லாமியக் குடியரசான மாலைத்தீவு, அதன் ஒதுங்கிய வெள்ளை மணல் கடற்கரைகள், ஆழமற்ற டர்க்கைஸ் தடாகங்கள் மற்றும் ராபின்சன் க்ரூஸோ பாணி சுற்றுலா தலங்களுக்கு பெயர் பெற்றது.

பெப்ரவரியில் 214,000 பிற வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில் 59 இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் மட்டுமே தீவுக்கூட்டத்திற்கு வருகை தந்ததாக அதிகாரப்பூர்வ தரவு காட்டுகிறது.

இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள்

1990களின் முற்பகுதியில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் மீதான முந்தைய தடையை மாலைத்தீவுகள் நீக்கியது, மேலும் 2010 ஆம் ஆண்டில் உறவுகளை மீட்டெடுக்கவும் நடவடிக்கைகள் மேற்கொண்டது.

தற்போது காசா போருக்கு எதிரான ஒரு அறிக்கையாக இஸ்ரேலியர்களைத் தடை செய்யுமாறு மாலைத்தீவில் உள்ள எதிர்க்கட்சிகளும் அரசாங்க நட்பு நாடுகளும் ஜனாதிபதி முய்ஸுவுக்கு அழுத்தம் கொடுத்து வந்த நிலையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version