Home இலங்கை குற்றம் கனடா அனுப்புவதாக பலரை ஏமாற்றிய நபர் கைது

கனடா அனுப்புவதாக பலரை ஏமாற்றிய நபர் கைது

0

கனடாவுக்கு அனுப்புவதாக பலரை ஏமாற்றிய நபரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

சுமார் 1.5 மில்லியன் ரூபாவை ஏமாற்றிய சிங்ஹாரகே ஜனக சில்வா என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

பணியகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய குறித்த நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணையின் பின்னர் கைது 

விசாரணைக்காக பணியகத்திற்கு அழைக்கப்பட்ட நிலையில், விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், வெளிநாடு செல்ல தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version