Home இலங்கை குற்றம் அம்பாறையில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

அம்பாறையில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

0

அம்பாறை- பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள மருதமுனை புறநகர் பகுதியில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (22) இரவு பெரியநீலாவணை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவத்தில் 29 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்ட நடவடிக்கை

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த பகுதியில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது சுமார் 700 க்கும் அதிகமான போதை
மாத்திரைகளை தன்வசம் வைத்திருந்த நபர் ஒருவர்  கைதானார்.

இந்தநிலையில், கைது செய்யப்பட்ட நபர்  நீண்ட காலமாக இளைஞர்களுக்கு போதை மாத்திரைகளை விநியோகம் செய்து வந்தவர் என தெரிய வந்துள்ளது.

மேலும்
சந்தேக நபர் உள்ளிட்ட சான்றுப் பொருட்கள் என்பன சட்ட நடவடிக்கைக்காக
கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version