Home இலங்கை குற்றம் யாழில் பெருமளவான போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!

யாழில் பெருமளவான போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!

0

யாழ்ப்பாணம் (Jaffna) – கொக்குவில் பகுதியில் பெருமளவான போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது இன்று (20) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மானிப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணைகள் 

சம்பவத்தில், 27 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, சந்தேகநபரிடமிருந்து  290 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு
விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும், விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம்
நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.

Source: https://tamilwin.com/article/man-arrested-with-quantity-of-drugs-in-jaffna-1742465918

NO COMMENTS

Exit mobile version