அம்பாறை, தெஹியத்தகண்டிய – உத்தலபுர பகுதியில் மின்சார வேலியில் சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்றையதினம்(19.12.2025) இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் கலேன்பிந்துனுவெவ பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் என்று
தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
இவர் காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்காகச் சட்டவிரோதமாகப்
பொருத்தப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளார் என்று
ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பில் தெஹியத்தகண்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
