Home இலங்கை குற்றம் வாக்குவாதம் காரணமாக கொடூரமாக கொலை செய்யப்பட்ட குடும்பஸ்தர்

வாக்குவாதம் காரணமாக கொடூரமாக கொலை செய்யப்பட்ட குடும்பஸ்தர்

0

நுவரெலியா, ஹங்குரான்கெத்த பகுதியில் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

முதற்கட்ட விசாரணைக்கு அமைய, குறித்த நபர் குழுவொன்றில் தாக்கப்பட்டு பின்னர் தள்ளிவிடப்பட்டு கொலை செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹெவாஹெட்ட நகரில் மற்றொரு நபருக்கும் உயிரிழந்த நபருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

கொடூரமாக கொலை

இதன் காரணமாக குழுவுடன் சேர்ந்து இந்த கொலையைச் செய்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்தவர் ஹேவாஹெட்ட பகுதியை சேர்ந்த 53 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஹங்குரான்கெத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கார்த்திகை உற்சவம்

NO COMMENTS

Exit mobile version