Home ஏனையவை ஆன்மீகம் மன்னார் மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழா பாதயாத்திரை

மன்னார் மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழா பாதயாத்திரை

0

மன்னார் மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழாவை முன்னிட்டு, நேற்றிரவு யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு
மணல்காடு அந்தோனியார் தேவாலயத்திலிருந்து பாதயாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மணல்காடு
அந்தோனியார் தேவாலயத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட பாத யாத்திரையில்
வடமராட்சியின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், மணல்காடு பங்கு மக்களுமாக சுமார்
150பேர் வரை இப்பாதயாத்திரையில் இணைந்திருந்தனர்.

ஆவணி மாத திருவிழா

இரவிரவாக பாத யாத்திரை
சென்ற மக்களுடன் செம்பியன்பற்று பங்கு மக்களும் இணைந்துகொண்டு இயக்கச்சி
சவேரியார் ஆலயத்தில் பாதயாத்திரையை நிறைவுசெய்து அங்கிருந்து இன்று பிற்பகல்
இரண்டாம் நாள் பாதயாத்திரையை தொடரவுள்ளனர்.

இதேவேளை கட்டைக்காடு பங்கிலிருந்தும் கிறிஸ்தவ மக்கள் மருதமடு அன்னையின்
ஆவணிமாத பெருந்திருவிழாவை முன்னிட்டு பாதயாத்திரையை நள்ளிரவில் ஆரம்பித்து
இயக்கச்சி சவேரியார் ஆலயத்தை சென்றடைந்து மணல்காட்டிலிருந்து சென்றவர்களும்
இணைந்தே இன்றைய நாள் பாதயாத்திரை இடம்பெறவுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version