Home இலங்கை அரசியல் மாவை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் – நாமல் ராஜபக்சவின் பதிவு

மாவை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் – நாமல் ராஜபக்சவின் பதிவு

0

தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராசா (Mavai Senathirajah) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்து மிகுந்த கவலை அடைந்துள்ளதாக என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவர் விரைவாகவும் முழுமையாகவும் குணமடைய மனதார பிரார்த்திக்கிறேன் என்றும் நாமல் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விடயத்தை  தனது சமூகவலைதள பதிவில் தெரிவித்துள்ளார்.

தலையில் நரம்பு வெடிப்பு

இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா வீட்டில் தவறி விழுந்த நிலையில், தலையில் நரம்பு வெடிப்பு
ஏற்பட்டதால் யாழ். போதனா வைத்திய சாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக நேற்று செவ்வாய்க்
கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

இந்நிலையில், மாவை சேனாதிராஜா தீவிர சிகிச்சை பிரிவில் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி நேற்று தனது முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பதிவில், மாவை தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் CT scan பரிசோதனையில் வைத்திய நிபுணர்கள் தலையில் கணிசமான அளவில் இரத்தப் பெருக்கு இருப்பதை கண்டறிந்தனர்.

அவருக்கு மூளையில் ஏற்பட்ட இரத்த கசிவு காரணமாக ஆபத்தான நிலையில் செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சையில் உள்ளார் என த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version