Home இலங்கை சமூகம் மாவையின் புகழுடலுக்கு இந்திய துணைத் தூதுவர் அஞ்சலி!

மாவையின் புகழுடலுக்கு இந்திய துணைத் தூதுவர் அஞ்சலி!

0

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் புகழுடலுக்கு யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதர் சாய் முரளி அஞ்சலி
செலுத்தியுள்ளார்.

மாவை சேனாதிராஜா வீட்டில் தவறி விழுந்த நிலையில், தலையில் நரம்பு வெடிப்பு ஏற்பட்டதால் யாழ். போதனா வைத்திய சாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக கடந்த செவ்வாய்க் கிழமை அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மக்கள் அஞ்சலி

அவருக்கு மூளையில் ஏற்பட்ட இரத்த கசிவு காரணமாக ஆபத்தான நிலையில் செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மாவை சேனாதிராஜா நேற்றிரவு (29.01.2025) உயிரிழந்ததாக அவரது குடும்ப உறுப்பினர்கள் உறுதிப்படுத்தினர்.

உயிரிழந்த மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக மாவிட்டபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அத்தோடு அரசியல் பிரமுகர்கள், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும்
தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்மை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/fg2PUv47NGg

NO COMMENTS

Exit mobile version