மாவீரர்களின் நினைவாக யாழ். நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு
முன்பாக அமைக்கப்பட்டுள்ள மாவீரர்களின் நினைவாலயம் நாளை(12.11.2025) மாலை 6
மணியளவில் அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது.
தாயக மண்ணின் விடியலுக்காக வித்தாகிப் போனவர்களுடன், தாயக மண்ணுக்காகத் தம்மை
அர்ப்பணித்த மாமனிதர்களையும், நாட்டுப் பற்றாளர்களையும் ஆவணப்படுத்தும்
வகையிலேயே மாவீரர்களின் நினைவாலயம் இம்முறை அமைக்கப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
