Home இலங்கை சமூகம் யாழில் பனையால் விழுந்ததாக கூறி குடும்பஸ்தர் வைத்தியசாலையில் அனுமதி – வைத்தியர்கள் சந்தேகம்

யாழில் பனையால் விழுந்ததாக கூறி குடும்பஸ்தர் வைத்தியசாலையில் அனுமதி – வைத்தியர்கள் சந்தேகம்

0

யாழில் குடும்பஸ்தர் ஒருவர் பனையால் விழுந்ததாக கூறி வைத்தியசாலைக்கு கொண்டுவந்து சேர்ப்பித்துவிட்டு
வைத்தியசாலைக்கு அழைத்து வந்தவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

பண்டத்தரிப்பு – சாந்தை பகுதியை சேர்ந்த 35 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு தெல்லிப்பழை
ஆதார வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார்.

பின்னர் அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு (Teaching Hospital Jaffna) அனுப்பி வைக்கப்பட்டார்.

தலையில் அறுவைச் சிகிச்சை

இந்நிலையில் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவருக்கு தலையில்
அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இருப்பினும் மயக்க நிலையில் இருந்து அவர்
மீளவில்லை.

குறித்த குடும்பஸ்தரின் தலை மற்றும் ஒரு கையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.

குறித்த காயம் பனையால் விழுந்தது போல் இல்லை என சந்தேகிக்கப்படுகிறது.

[VLU41S6
]

NO COMMENTS

Exit mobile version