வானிலை ஆய்வு மையம்,வெப்பம் மிக்க வானிலை எச்சரிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த எச்சரிக்கை யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மொனராகலை மற்றும்
ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களிலும், வெப்பக் குறியீடானது மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை நிலைக்கு அதிகரிக்க
வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக வெப்பநிலை
அதிக வெப்பநிலையின் கீழ், நீண்ட நேரம் வெளிப்புறங்களில் வேளைகளில் ஈடுபட்டால்
சோர்வு ஏற்பட வாய்ப்புள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் வெப்பப் பிடிப்புகளுக்கு
வழிவகுக்கும் என அறிவுருத்தப்பட்டுள்ளது.
எனவே, முடிந்தவரை அடிக்கடி நிழலை நாட வேண்டும் எனவும் கடுமையான வெளிப்புற
செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
