யாழி்ல் சிறுவன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அவரது தந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
17 வயதுடைய மகன் ச.சயோசியன் என்ற சிறுவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
கோரிக்கை
யாழ்ப்பாணம் – மல்லாகம், நரியிட்டான் பகுதியில் வசித்து வந்த குறித்த இளைஞன் கடந்த 31.10.2025 வெள்ளிக்கிழமை
வீட்டைவிட்டு சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை என பெற்றோர் முறைப்பாடு
செய்துள்ளனர்.
இவர் குறித்த தகவல் தெரிந்தவர்கள் பெற்றோர் அல்லது தெல்லிப்பழை பொலிஸாருக்கு
தகவல் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
