Home இந்தியா பிரதமரின் இந்திய விஜயம்: கச்சத்தீவு குறித்து மோடியிடம் ஸ்டாலினின் அவசர கோரிக்கை

பிரதமரின் இந்திய விஜயம்: கச்சத்தீவு குறித்து மோடியிடம் ஸ்டாலினின் அவசர கோரிக்கை

0

கச்சத்தீவு மீட்பு குறித்து இலங்கைப் பிரதமரிடம் வலியுருத்துமாரு இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் (
Narendra Modi) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (M.K.Stalin) கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) இந்தியாவிற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

இது தொடர்பில் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில்,

  1. இந்திய கடற்றொழிலாளர் மற்றும் படகுகளை உடனடியாக விடுவித்தல்.
  2. கடற்றொழிலாளர் மீது நிகழ்த்தப்படும் வன்முறை மற்றும் திருட்டுச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்துதல்.
  3. பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை நாட்டுடைமையாக்குவதால் உண்டாகும் பாதிப்பு.
  4. கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டங்களை நடத்துதல்
    ஆகியவற்றை இலங்கை பிரதமரிடம் வலியுறுத்த வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version