Home இலங்கை குற்றம் இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு: மோட்டார் சைக்கிள் தீக்கிரை

இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு: மோட்டார் சைக்கிள் தீக்கிரை

0

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக மோட்டார் சைக்கிளொன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது  நேற்று (17) மாலை கொட்டகலை பகுதியில் உள்ள சுரங்கத்தை அண்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் 7 இலட்சம் ரூபாய் பெறுமதியான மோட்டார் சைக்கிள் தீக்கிரையாகியுள்ளது.

மேலதிக விசாரணை

அத்தோடு,  இருவருக்கு இடையே ஏற்பட்ட வாய் தர்க்கம் சண்டையில் முடிந்து இருவரும் படுகாயங்களுடன் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://tamilwin.com/article/motorcycle-fire-in-nuwara-eliya-1744951549

NO COMMENTS

Exit mobile version