ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து மதராஸி என்ற படத்தை இயக்கி இருக்கிறார். வரும் செப்டம்பர் 5ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகிறது.
பெரிய எதிர்பார்ப்பும் இந்த படத்தின் மீது இருக்கிறது. அதற்கு காரணம் முருகதாஸ் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழில் படம் இயக்குவது தான்.
ஷாருக் கான் ஓகே செய்த கதை
இந்நிலையில் தற்போது இந்த படம் பற்றி முக்கிய தகவலை முருகதாஸ் கூறி இருக்கிறார். இந்த கதையை 7 – 8 வருடங்களுக்கு முன் முதலில் ஷாருக் கானுக்கு தான் அவர் சொன்னாராம். அவரும் நல்லா இருக்கு என ஓகே என சொன்னாராம்.
2 வாரங்கள் கழித்து மெசேஜ் செய்தேன், ஆனால் அவர் பதில் கொஞ்சம் தாமதமாக இருந்தது. அதனால் அதற்கு பிறகு நான் தொடர்பு கொள்ளவில்லை என முருகதாஸ் தெரிவித்து இருக்கிறார்.
