Home இலங்கை அரசியல் இஷாராவின் விசாரணை.. நாமல் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு!

இஷாராவின் விசாரணை.. நாமல் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு!

0

நாமல் தொடர்பான எந்த தகவலையும் இஷாரா செவ்வந்தி இன்னும் வெளியிடவில்லை.

அதனால் நாமல் அச்சமடைய தேவையில்லை என பிரதியமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்துள்ளார்.

எனக்கு தெரிந்து இன்னும் ஒன்றும் நாமலை பற்றி சொல்லவில்லை. அதனால் நாமல் நாமலின் வேலையை பார்ப்பது நல்லது என்று கூறியுள்ளார்.

இதேவேளை, கைது செய்யப்பட்டுள்ள இஷாரா தொடர்பான விசாரணைகளை அரசாங்கம் முன்னெடுக்கும். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என பிரதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

செவ்வந்தியை கைது செய்ய அரசாங்கத்திற்கு ஒரு வருடம் சென்றுள்ளதாகவும் அரசாங்கத்தின் போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்தும் நாமல் விமர்சனம் செய்துள்ளார்.  

இதுபோன்ற முக்கியச் செயதிகளுடன் வருகிறது லங்காசிறியின் செய்திகளின் தொகுப்பு,  

NO COMMENTS

Exit mobile version