Home இலங்கை இலங்கை சிறைக்குள் நடந்த கொடூரங்கள்.. ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள தகவல்

இலங்கை சிறைக்குள் நடந்த கொடூரங்கள்.. ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள தகவல்

0

இலங்கைக்கான ஐ.நா.வின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிரான்வே, நீர்கொழும்பு சிறைச்சாலையில் நிகழ்ந்த சம்பவத்திற்குத் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

ஓர் அறிக்கையில், ஐக்கிய நாடுகள் சபை இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தனது இரங்கலைத் தெரிவித்ததோடு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்திக்கின்றது. 

சிறை அதிகாரிகள் அரசுக்கும் பொதுமக்களுக்கும் சேவை செய்வதில் கடினமான பணியை ஆற்றுகிறார்கள் என்றும், அவர்களின் இழப்பு ஆழ்ந்து உணரப்படும் என்றும் குறிப்பிடுகிறது.

கடுமையான சவால்கள்

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த கைதிகள் அரசாங்கத்தின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பில் இருந்ததால், பாதுகாப்பைப் பேணுவதை உறுதி செய்வது அரசாங்கத்தின் முதன்மைப் பொறுப்பாகும் என்றும், ஏனெனில் சிறை அமைப்பில் பணியாற்றும் அதிகாரிகளுக்கும் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கும் உயர் மட்டப் பாதுகாப்புக்கு உரிமை உண்டு என்றும் சுட்டிக்காட்டுகிறது.

இந்தச் சம்பவத்தின் மூலம் நாட்டின் சிறை அமைப்பில் தொடர்ச்சியான முதலீட்டின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்துள்ள வதிவிட ஒருங்கிணைப்பாளர், தடுப்புக்காவல் மையங்களில் நிலவும் நெரிசல், காலாவதியான நடைமுறைகள் மற்றும் வசதிக் குறைபாடு ஆகியவை இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள சிறை அமைப்புகள் எதிர்கொள்ளும் கடுமையான சவால்கள் என்று சுட்டிக்காட்டினார்.

இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க ஒரு சுதந்திரமான குழு அமைக்கப்பட்டதை ஐக்கிய நாடுகள் சபை பாராட்டுவதாகவும், அக்குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் செயல்படுத்த வேண்டும் என்றும் வதிவிட ஒருங்கிணைப்பாளர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலை பாதுகாப்பை வலுப்படுத்தவும், தடுப்புக்காவல் வசதிகளை மேம்படுத்தவும், சிறை ஊழியர்களின் நலனை மேம்படுத்தவும், தொழில்நுட்ப உதவி உள்ளிட்ட ஆதரவை இலங்கைக்குத் தொடர்ந்து வழங்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.

Source: https://tamilwin.com/article/negombo-prison-riot-united-nations-report-1783447612

NO COMMENTS

Exit mobile version